Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Lord Murugan Devotional Songs Lyrics In Tamil Collection | Murugan Bakthi Padal Varigal -Volume 1 | brightboard.net | MOON BOSS

Lord Murugan Devotional Songs Lyrics In Tamil-Collection, Also Known As Murugan Bakthi Paadal Varigal In Tamil .






Lord Murugan Tamil devotional songs lyrics brightboard.net


Om Saravanabhavaya Namaha



( நேரடியாக முருகனின் பக்தி பாடல் வரிகள் பகுதிக்கு செல்ல விரும்புவோர் இந்தப் பக்கத்தில் சற்று கீழாக செல்லவும் . ஓம் வெற்றிவேல் முருகா சரணம் !)

             ஓம் சரஹணபவாய நமஹ ! முதலாவதாக இந்த பதிவு எழுதும் எண்ணத்தையும் அதற்கான நேரத்தையும் கொடுத்த எனது ஐயன் வெற்றிவேல் முருகனின் மலர் பாதங்களுக்கு முதற்கண் வணக்கம். அதோடு மும்மூர்த்தி சொரூபன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கக்கூடிய அப்பன் ஆறுமுக சுவாமி பற்றிய பதிவினை மாசிமகம் திருநாள் ஆன இன்று பதிவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அதேபோல் தமிழ் மொழி பரவியுள்ள இடம் எங்கிலும் அதாவது உலகமெங்கிலும் முருகனின் புகழ் கேட்டுக் கொண்டேதான் இருக்கும். தமிழ்மொழியே உலகில் பழமையான மொழி என்பதற்கு பல தொல்லியல் சான்றுகள் இருக்கின்றது. அவ்வாறு இருக்கும்பொழுது தமிழ்மொழியின் கடவுளாக போற்றப்படும் முருக கடவுளின் தொன்மையும் அவரது சக்தியும் அளப்பரியது. பொதுவாக உலகம் முழுவதிலும் முருக கடவுளின் புகழ்பாட பட்டாலும் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில், மேலும் சொல்லப்போனால் நமது தமிழ்நாட்டில் முருக கடவுளின் கோவிலும் அவர் மந்திரங்களும் அவரது பெயரும் இடம்பெறாத இடமே இல்லை என்று கூறலாம். புராணங்களின் படியும் நாம் படித்த வரலாற்றின்படியும் பல்வேறு கடவுள்கள் இருந்தாலும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கருதப்படுவது கந்த கடவுளை மட்டுமே. அதனால் தான் அவரது மகிமையை விளக்கும் பொருட்டு "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியசுவாமிக்கு மீறிய கடவுளும் இல்லை" என்ற கருத்து உள்ளது. உண்மையில் அது கருத்து மட்டுமல்ல தனது அடியவர்க்கும் பக்தர்களுக்கும் ஏதேனும் குறை என்று அறிந்தாலும் தன்னை முருகா என்று மனதார கூப்பிட்டாலும் போதும் உடனே மயில் வாகனத்தின் மீது வேலாயுதசாமியாய் பக்தரைக் காக்க ஓடோடி வந்து விடுவார். இது வெறும் வாய்ப்பேச்சு மிகைப்படுத்தலுக்காக சொல்லப்படும் கூற்று அல்ல பல லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் வாழ்வில் முருகப் பெருமானின் கருணையை மனதார உணர்ந்து அவரது அருளை பெற்று இன்புற்று வாழ்ந்து வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். அதன் ஒரு பகுதியாகவே முருகப்பெருமானின் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதையும் நாம் காணமுடியும். இந்தப் பதிவில் முருகப்பெருமானை போற்றியும் வணங்கியும் அடியேன் சில பாடல்களை எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் அனைத்தும் எனது ஐயன் மீதான எனது பக்தியின் வெளிப்பாடு மட்டுமே ஆகும் இதில் சொற்குற்றம் பொருள் குற்றம் போன்ற எந்த குற்றங்கள் இருந்தாலும் பக்தர்கள் தயவுசெய்து என்னை மன்னித்தருள வேண்டும். மேலும் ஏதேனும் தவறு இருப்பதை கண்டறிந்தால் அடியேனுக்கு தாங்கள் தவறாமல் குறிப்பிடவும். அப்பன் முருகன் மீதான இச்சிறு பக்தனின் சில பாடல்களை இங்கே எழுதுவதற்கு முன் அப்பன் முருகப்பெருமானின் வரலாற்றை சிறிதளவு இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

முருகப்பெருமானின் தோற்றம்!

     முருகப்பெருமான் அன்னை பார்வதி மற்றும் சிவபெருமானின் புதல்வன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் முருகன் ஆனவர் ஆறுமுக சிவன் என்றும் அழைக்கப்படுகின்றார். முருகனின் பிறப்பு ஒரு காரணப் பிறப்பாகும். சிவபெருமானிடம் வேண்டி வரம் பெற்ற சூரபதுமன் பல யுகங்களாக அனைத்து உலகங்களையும் ஆட்சி புரிந்து வந்தான். ஆனால் அவனது ஆணவமும் அகங்காரமும் எல்லைமீறி அனைத்துலக ஜீவராசிகளையும் கொடுமைப்படுத்தி வந்தான். இந்த கொடுமையில் சாகாவரம் பெற்ற தேவர்களும் கூட தப்ப முடியவில்லை. தேவர்களின் அந்த அவல நிலைக்கு காரணம் முன்பொரு காலத்தில் அவர்கள் செய்த கர்மவினை பலனே காரணமாகும். இருந்தாலும் அசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் மற்றும் அனைத்துலக வாசிகளும் பிரம்மதேவன் முதல், விஷ்ணுபகவான் வரை அனைத்து தேவர்களையும் நாடிய பிறகு. நீண்ட தவத்தில் வீற்றிருந்த சிவபெருமானிடம் உதவி வேண்டி வந்தனர். ஆனால் தவக்கோலம் பூண்டு இருக்கும் சிவபெருமானை தவத்தில் இருந்து எழுப்பும் துணிவு யாருக்கும் இல்லை. இருந்தாலும் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி மன்மதனை அவனது மன்மத பானத்துடன் சிவபெருமானை தவக்கோலத்தில் இருந்து எழுப்பும் பணிக்காக உலக நன்மையின் பொருட்டு அனுப்பி வைத்தனர். மன்மதனும் பல்வேறு யோசனை மற்றும் தயக்கங்களுக்கு பிறகு உலக நன்மையின் பொருட்டு சிவபெருமானின் மீது தனது மன்மத பானத்தை செலுத்தி அவரது தவ கோலத்தை கலைத்தார். (அதன்பிறகு சிவபெருமானின் நெற்றிக்கண் மன்மதனை எரித்தது) பிறகு அனைத்து தேவர்களும் சிவபெருமானிடமும் சக்திதேவியிடமும் அவர்களின் அவலநிலையை குறித்து முறையிட்டு அசுரர்களின் அகங்காரத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டினர். மேலும் சிவனாரின் சக்தி இல்லாத வேறொரு சக்தியால் தன்னை கொள்ள முடியாது என்ற வரத்தினை சூரபதுமன் பெற்றிருந்தான். தேவர்களின் குறை கேட்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். சிவனாரின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், மற்றும் ஈசானம் ஆகிய ஐந்து முகங்களுடன் ஆறாவதாக அதோமுகம் எனும் முகமும் சேர்ந்து ஆறுமுக சுவாமி முருகப்பெருமான் எழுந்தருளினார். பிறகு கார்த்திகைப் பெண்களால் 6 சிறுவர்களாக வளர்க்கப்பட்ட முருகப்பெருமான் கார்த்திகேயன் என அழைக்கப்பட்டார் . அன்னை சக்தி தேவி  சிவனாருடன் முருகப் பெருமானின் ஆரு உருவங்களையும் ஒரு உடலாக்கி, ஆறு தலைகள் கொண்ட கார்த்திகேயனை ஆறுமுகன் என்று அழைத்தனர். பிறகு சிவசக்தியருடன் திருக்கயிலாயம் சென்ற பிறகு பல்வேறு திருவிளையாடல்களை சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே செய்யத் தொடங்கினார். அந்தத் திருவிளையாடல்களை கண்டு அசுரர்கள் மட்டுமன்றி தேவர்களும் நடுநடுங்கி போயினர். பிறகு பல்வேறு அஸ்திர சஸ்திரங்களில் தனது தவத்தின் மூலம் முழுமை பெற்றார். சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கிணங்க எம்பெருமான் முருகப் பெருமான் தேவர்களையும் அனைத்துலக ஜீவராசிகளையும் காத்தருளும் பொருட்டு அசுரர்களுடன் போரிடுவதற்காக புறப்பட்டார். எம்பெருமான் முருகப் பெருமானிடம் அனைத்து தேவர்களின் ஒருங்கே பெற்ற சக்தியும் அஸ்திரங்கள் மற்றும் சஸ்திரங்களும் இருந்தது. பன்னிரு கரங்களும் எதிரிகளை அழிப்பதோடு தனது பக்தர்களை காத்திடவும் எப்போதும் தயாராக இருந்தது.வெற்றிவேல் முருகனின் அஸ்திரங்கலில் அன்னை பார்வதி தேவியின் முழு சக்தியும் கொண்ட சக்திவேலும், சிவபெருமானின் சக்தியைக் கொண்ட அவரது திவ்ய அஸ்திரமான பாசுபதாஸ்திரமும் ஒருங்கே பெற்று சக்திதர மூர்த்தியாக சூரணை வென்று தேவர்களையும் பிற உலகத்தோரையும் காக்க தனது வேர் படையுடன் போர்க்களம் பூண்டார். எம்பெருமான் முருகப் பெருமான் அழிக்கும் கடவுள் அல்ல அவர் எப்பொழுதும் தனது பக்தர்களை காக்கும் கடவுள் மட்டுமே மேலும் சூரபத்மனுடன் போர் இடுவதற்கு முன்பாக அவர் வீரபாகு உள்ளிட்ட பல்வேறு தூதுவர்களை அனுப்பி தேவர்களையும் உலக ஜீவராசிகளையும் விடுவித்து ஈசன் அடியை சரணடையும்படி கட்டளையிட்டார். ஆனால் ஆணவம் கொண்ட சூரபத்மன், அவனது சகோதரர்கள் மற்றும் அரக்கர் சேனை அனைவரும் முருகப்பெருமானின் வீரத்தையும் சக்தியையும் குறைவாக எடை போட்டு முருகப்பெருமானிடம் போரிட போர்களம் வந்தனர். அவ்வாறு முருகப்பெருமான் போரிடுவதற்காக தனது வேல் படையுடன் தங்கிய இடங்களே இன்று  சுவாமிமலை, பழனி, திருப்பரங்குன்றம் திருத்தணிகை திருச்செந்தூர் பழமுதிர்ச்சோலை, என்ற ஆறுபடை வீடுகள் ஆனது. இதில் எம்பெருமான் முருகப் பெருமான் சூரபத்மன்  அவனது சகோதரர்கள் சிங்கமுகன்,தாரகாசுரன் மற்றும் அவனது மகன் பானுகோபன் உட்பட அவனது அனைத்து அசுர சேனைகளையும் திருச்செந்தூர் படைவீட்டில் சம்காரம் செய்தார். ஆனால் முருகப்பெருமான் சூரபத்மனை முழுமையாக அழித்து விடவில்லை ஏனெனில் அவர்தான் கருணையின் கடலாயிற்றே! பல மாயங்கள் செய்து தப்பிக்க நினைத்த சூரபத்மனை முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் சம்காரம் செய்தார். மாயையான மரமாகி இரு துண்டுகளாக பிளவுபட்ட சூரபத்மனை ஆட்கொண்டு அவனது ஒரு பகுதியை தனது வாகனம் மயிலாகவும்( உண்மையில் முருகப்பெருமானுக்கு சூரபத்மன் மயில் வாகனமாக மாறுவதற்கு முன்னரே கருடவாகனத்தின் மகன் மயில்வாகனன் முருகப்பெருமானின் வாகனமாக இருப்பார்.) மற்றொரு பகுதியை சேவல் கொடியாக தனது கைகளிலும் ஏந்தி சூரபத்மனுக்கு அருளாசி வழங்கி எப்பொழுதும் தன்னுடனே இருக்கும் பாக்கியத்தையும் பெரும் பேற்றையும் தந்தருளினார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கந்தனின் கருணையையும் அவரது பெருமையையும். எனவே கந்தன் எப்பொழுதுமே காக்கும் கடவுள் தான் அவர் அழிக்கும் கடவுள் கிடையாது. அப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்த அசுரர்களை அவர்கள் பாவத்தை போக்கி அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி அவர்களை ஆட்கொண்டு தன்னுடனே வைத்துக்கொண்டார். அவ்வாறே தன்னை வணங்கும் பக்தர்களுக்கும் எப்பொழுதும் துணையாக இருந்து அனைத்து வளங்களையும் முருகப்பெருமான் தந்தருளி கொண்டுள்ளார்.

மும்மூர்த்திகளின் சொரூபன் முருகன்

      ஆம்! உண்மைதான் முருகப்பெருமான் ஒருவரை வணங்கினால் மட்டுமே போதும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் முத்தேவியர்களான சரஸ்வதிதேவி, லட்சுமிதேவி, மற்றும் பார்வதி அன்னை, ஆகிய அனைவரையும் ஒருசேர வணங்கிய  பலனை பெற்றுவிட முடியும். ஏனெனில் முருகன் வேறு சிவன் வேறு அல்ல! அதோடு மும்மூர்த்திகள் வேறு எம்பெருமான் முருகப் பெருமானும் வேறு அல்ல. முருகப்பெருமானின் ஒரு ரூபத்திற்குள்ளாகவே மும்மூர்த்திகளின் சொரூபங்கள் அடக்கமாக உள்ளது. இதற்கு எம்பெருமான் முருகப் பெருமானின் முருகு என்னும் நாமமே சாட்சி.

மு என்பது முகுந்தன் எனும் விஷ்ணுவையும்
ரு என்பது ருத்ரன் எனும் சிவ பெருமானையும்
என்பது கமலோத்பவன் எனும் பிரம்ம தேவனையும் குறிக்கும்.

         எனவே இதிலிருந்தே நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் எம்பெருமான் முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் சொரூபமாக இருந்து மும்மூர்த்திகளின் தொழில்களாகிய,
 •பிரம்மாவின் -படைத்தல்
 •விஷ்ணு தேவனின்- காத்தல் மற்றும்
 •சிவபெருமானின் -அழித்தல் 
ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார்.

       அதுஎப்படி ஒருவரே முத்தொழில்களையும் செய்ய முடியும் என்று கேட்கலாம்! அதற்குடைய விடை எம்பெருமான் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்வில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்!படைத்தல் என்பது ஒரு புதிய பொருளை/உயிரை படைப்பது மட்டும் என்ற பொருள் கிடையாது தனது பக்தர்களிடம் நல்ல எண்ணங்களை, சிந்தனையை, கருனையை,பண்பினை ,பக்தியை உருவாக்குவது என்றும் பொருள் கொள்ள வேண்டும் அதனையே முருகப்பெருமான் லட்சோப லட்சம் மக்களிடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். காத்தல் என்பது ஏதேனும் துன்பம் வரும் வேளையில் மட்டும் அரணாக நின்று காப்பது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது முருகப்பெருமானின் காத்தல் எனும் தொழிலானது தனது பக்தர்களுக்கு துன்பம் வந்த பிறகு காத்து அருள் புரிவதோடு மட்டுமல்லாமல் தனது பக்தர்களுக்கு எந்த தீங்கும் வராதபடிக்கு அவர்களை நல்வழிப்படுத்தி தீங்கு வருவதற்கு முன்பாகவே அவர்களை அரணாக முருகனின் வேலும்,பயிலும் அய்யனின் திருநாமங்களும் காத்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.(இன்றும் கூட நாம் ஏதேனும் பயணம் செய்வதற்கு முன் முருகப்பெருமானின்

ஓம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

     எனும் மந்திரத்தை குறைந்தது மூன்று முறை சொல்லி முருகப்பெருமானின் திருநாமத்தை ஓதி திருநீறு அணிந்து சென்றால் நமது பயணத்தின் போது எந்த விதமான இடைஞ்சல்கள்  விபத்துகள் ஏற்படாது என்பது நம்பிக்கை மட்டுமல்ல பலபேர் கண்கூடாக பார்த்து வரும் உண்மை ஆகும்.


கருணைக்கடல் சஷ்டி விரதம் மூலம் குழந்தை வரம் தவறாமல் அருளும் முருகன்!


     மேலும் எம்பெருமான் முருகப் பெருமானின் பெருமைகளையும் அவரது அருள் ஆசிகளையும் பேசவும் எழுதவும் உண்மையில் ஒரு பிறப்பு என்பது போதாது. அதோடு முருகப்பெருமானின் தெய்வ ரகசியம் நிறைந்த உண்மைகளில் ஒன்று குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை வரம் வேண்டி  எம்பெருமானின் மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு தவறாமல் குழந்தைப்பேறு வாய்ப்பதுதான் முருகப்பெருமானே வேண்டிய பக்தர்களுக்கு குழந்தையாக பிறப்பதை ஆயிரமாயிரம் சாட்சிகள் மூலம் கண்கூடாக பயனடைந்தோரிடமிருந்து நம்மால் கூறமடியும். உண்மையில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதத்தை உள்ளன்போடு கடைபடித்து மிகுந்த பொருட்செலவு இல்லாமல் போனாலும் மனதளவில் ஒரு சிறு தீபத்தை ஏற்றி அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப  உண்ணாவிரதமிருந்து ஆறு நாட்கள் விரதத்துடன் ஏழாம் நாள் வள்ளி தெய்வானை திருமணத்தைப் பார்த்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியாக எம்பெருமான் முருகப்பெருமானை தரிசித்தவர்ளுக்கு நிச்சயமாக குழந்தைப்பேறு வாய்ப்பது கண்கூடாக காணமுடிகிறது. இதுமட்டுமன்றி எம்பெருமான் முருகப் பெருமானின் பெருமைகளையும் அருளையும் திருவிளையாடல்களையும் கூறிக்கொண்டே செல்லலாம். எனினும் அடியேனின் இப்பதிவில் முருகப்பெருமானின் அருளையும் அவரது கருணையும் குறித்து அடியேன் எழுதிய சில பாடல்களை இங்கே எழுத வேண்டும் என்பதனால் முருகப்பெருமானின் சிறப்பியல்புகளை இந்த அளவிலேயே பகிர்ந்தது உடன் பாடலாக தொடர உத்தேசித்துள்ளேன்.

      முருகப்பெருமானின் இச்சிறு பக்தன் இங்கே எழுத உள்ள பக்தி பாடல்களின் வரிகள்  முருகப்பெருமானின் மீதான  பக்தியின் வெளிப்பாடு மட்டுமே ஆகும். மேலும் இந்த பக்திப்பாடல்கள் அனைவருக்கும் பயன்படும் பொருட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதன் பாடல்வரிகளை ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்க உள்ளோம்.எம்பெருமான் முருகப் பெருமானின் அருளாசியும் கருணையும் எப்போதும் உங்களுடனும் உங்களது குடும்பத்துடனும் நிலைத்து நிறைந்திருக்கும் என்பதில் சிறு துளியும் சந்தேகமில்லை. ஓம் சரஹணபவாய நமஹ!

 முருகப்பெருமானின் பக்திப் பாடல்கள்-தொகுப்பு

பாடல் -1 


ஏறுமயில் நாதனே !


ஏருமயில் நாதனே 
என்னருமை வேலனே 
ஏருமையில் நாதனே
என்னருமை வேலனே
பன்னிருக்கை பாலனே
ஈஸ்வரனின் மைந்தனே ( ஏறுமயில்....)

ஆறெழுத்து நாமம் கொண்டு
தரணியிலே உதித்தாய்
பிரணவ மந்திரத்தை
அப்பனுக்கே போதித்தாய்
சக்தியின் மைந்தனாய்
தரணியை ஆட்சி செய்தாய்
வெற்றிவேல் நாமம் கொண்டு
சூரனையும் வென்றாய்.         ( ஏறுமயில்...)

தெய்வானை அன்னையுடன்
திருப்பரங்குன்றம் சென்று
தெய்வங்கள் யாவருக்கும்
ஆசியை வணங்கினாய்

கிழவனாய் வேடமிட்டு
திருத்தணிகை சென்று
வள்ளி அன்னையையும்
உன் வசம் ஆக்கினாய்    ( ஏறுமயில்....)


வெற்றிவேல் வீரவேல்
என்று சொன்னால் வந்திடுவாய்
காவடி ஏந்தி வந்தால்
காவலாய் நின்றிடுவாய்
பக்தருக்கு குறை என்றால்
பக்கத் துணை நின்றிடுவாய்
வல்வினைகள் போக்கிடுவாய்
வாழ்வுதனை தந்திடுவாய்
பார் போற்றும் வேலனே- அன்னை
பார்வதி மைந்தனே ! (  ஏறுமயில் full )



ERU MAYIL NATHANEY ( ENGLISH 

VERSION)


Eru mayil nathaney
Ennarumai velaney
Eru mayil nathaney
Ennarumai velaney
Pannirukkai baalaney
Eashwaranin mainthaney  ( Erumayil....)

Aareyuthu naamam kondu
Tharaniyiley uthithaai
Pranava manthirathai 
Appanukkey bothithaai

Sakthiyin mainthanaai
Tharaniyai aatchi seithaai
Vetrivel naamam kondu 
Sooranaiyum vendraai.   ( Eru mayil...)

Dheivaanai annaiyudan
Thirupparangundram sendru
Theivangal yaavarukkum 
Aasiyai vananginaai.

Kizhavanaai vedamittu
Thiru thanigai sendru
Valli annaiyaiyum 
Un vasam aakkinaai ( Eru mayil....)

Vetrivel Veeravel
Endru sonnal vanthiduvaai
Kaavadi enthi vanthaal
Kaavalaai nindriduvaai
Baktharukku kurai endraal
Pakkath thunai nindriduvaai
Valvinaigal pokkiduvaai
Vaazhvu thanai thanthiduvaai
Paar potrum velaney - annai
Paarvathi mainthaney  ( Eru mayil.....)





பாடல் -2

தேவாதி தேவர்கள் எல்லாம்




தேவாதி தேவர்கள் எல்லாம்
தொழுது மகிழும் வேலவனே
உம் திருப்பாதம் தரிசிக்க வேண்டி
கால் கடுக்க வாரோமே       ( தேவாதி....)

காவடியை ஏந்திக்கிட்டு
கந்தசஷ்டி பாடிக்கிட்டு
மலையேறி வருவோமே-உன்
திருவருளை பெறுவோமே ( தேவாதி....)

சித்தரும் முனிவரும் உன்னிடமே
அந்த சிவனும் ஹரியும் உன் வசமே
ஒளவைக் கிழவியின் புகலிடமே - அன்னை
சக்தி தேவியின் இருப்பிடமே ( தேவாதி...)

சூரனை போரினில் வெற்றி கொண்டு
அன்னை தெய்வயானையை மனந்தவரே
சிவனும் பார்வதியும் மகிழ -நல்
திருப்பரங்குன்றில்  அமர்ந்தவரே
வெற்றிவேலினை ஏந்திக்கிட்டு - என்றும்
 பக்தனின் துணையாய் வருபவரே ( தேவாதி.....)


நடந்ததும் நடப்பதும் உன் செயலே
இந்த ஞாலம் சுழல்வதும் உன்னருளே
முக்தியைத் தந்திடும் பரம்பொருளே
என் முருகா நீ தான் அருட்கடலே
முக்தியை தந்திடும் பரம்பொருளே
என் முருகா நீ என் அருட்கடலே !  ( தேவாதி .... )





THEVAATHI THEVARGAL ELLAAM ( 

English Version )


Thevaathi thevargal ellaam
Thozhuthu magizhum velavaney
Umm thirup paatham tharisikka vendi 
Kaal kadukka vaaromey   ( Thevaathi....)

Kaavadiyai enthikittu 
Kantha sasti paadikkittu
Malai eri varuvomey -unn
Thiruvarulai peruvomey    ( Thevaathi....)

Sitharum munivarum unnidamey
Antha shivanum hariyum unn vasamey
Avvaik kizhaviyin pugalidamey - annai
Shakthi dheviyin iruppidamey   ( Thevaathi....)

Sooranai porinil vetrikondu 
Annai Dheivayaanaiyai mananthavarey
Shivanum paarvathiyum maghizha - nall
Thirupparangundril amarnthavarey
Vetri velinai enthikkittu - endrum
Bakthanin thunaiyaai varubavarey ( Thevaathi....)

Nadanthathum nadappathum unn seyaley
Intha gnaalam suyalvathum unn aruley
Mukthiyai thanthidum paramporuley
Enn murugaa neethaan arutkadaley
Mukthiyai thanthidum paramporuley
Enn murugaa nee enn arutkadaley ! ( Thevaathi...)



Note : Please Don't Copy Or Re use This lyrics without permission. The Above Songs Lyrics Are The Creation Of www.brightboard.net and boss group. Thank you

அடுத்த பாடல் விரைவில்......!

🙏 Om vetrivel Muruga saranam saranam 🙏









Post a Comment

0 Comments